சஹாரா பாலைவனத்தில் இருந்து ஸ்பெயினை நோக்கி வீசும் மணல் புயலால் பல்வேறு பகுதிகள் புழுதி மண்டலமாக காட்சியளிக்கின்றன. கடந்த 3 நாட்களாக வீசி வரும் செலிகா புயலால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மாட்ரிட்டில் வீதிகள், வாகனங்கள், வீட்டு மாடி என எங்கும் படர்ந்திருக்கும் புழுதியை பொதுமக்கள் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.