ஓட்டப்பிடாரம்,பிப்.17: புளியம்பட்டி அருகே சவலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை சண்முகையா எம்எல்ஏ வழங்கினார். புளியம்பட்டி அருகே சவாலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. சண்முகையா எம்எல்ஏ தலைமை வகித்து 33 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசுகையில், ‘தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் என முற்போக்கான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்பட்டு வருகிறது. எனவே மாணவர்கள் நன்கு படித்து எதிர்காலத்தில் அரசின் உயர் பதவிகளில் வந்து பெருமை தர வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பிரேமாகுமாரி, ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி சின்னத்துரை, பள்ளி மேலாண்மை குழு விஜி, ஒன்றிய செயலாளர் சுரேஷ்காந்தி, மாவட்ட விவசாய அணி தலைவர் சுப்பையா, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கொம்பையா, ஒன்றிய கவுன்சிலர் மாரியப்பன், கிளைச்செயலாளர் செந்தூர்பாண்டியன், வரதராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சவலாப்பேரி பள்ளியில் இலவச சைக்கிள்
previous post