கோவை, மார்ச் 13: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட கோவை மாவட்ட வீரர்கள் 5 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளனர் தந்துள்ளனர். சர்வதேச அளவிலான கராத்தே போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்றது.
இந்தயா அணி சார்பாக கோவை ஜி தோக்கு காய் கராத்தே பள்ளியின் டைகர் கராத்தே கிளப் மாணவர்கள் மகிழன், பவீனா சாய், மானுஷாதேவி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் 11 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான சண்டை பிரிவில் மகிழன் வெள்ளிப்பதக்கம் வென்றார். 11 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சண்டை பிரிவில் குழு கட்டா மற்றும் குழு சண்டைப் பிரிவுகளில் பவீணா சாய் 3 வெண்கலப் பதக்கங்கள் வென்றார்.
18 வயது மேற்பட்டோருக்கான பெண்கள் குழு சண்டைப் பிரிவில் மாணுஷாதேவி வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப்போட்டியில், கோவையை சேர்ந்த சென்ஸெய் சிவசண்முகம் இந்திய கராத்தே அணியின் தமிழக வீரர்களுக்கான பயிற்சியாளராக பங்கேற்றார். மேலும், மதுரையை சேர்ந்த சென்ஸெய்.
கௌரி ஷங்கர் மற்றும் சேலத்தை சேர்ந்த சென்ஸெய்.சதீஷ்குமார் ராஜி ஆகியோர் இந்தியா சார்பாக போட்டி நடுவர்களாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்த கோவை வீரர் மற்றும் வீராங்கனைகளை உலக கராத்தே சங்கத்தின் நடுவர் கியோஷீ முத்துராஜூ தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.