Thursday, May 16, 2024
Home » சம்பா சாகுபடியில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல்

சம்பா சாகுபடியில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல்

by Neethimaan

தோகைமலை, டிச. 17: சம்பா நெல் பயிரில் சில தற்போது பூட்டு தோன்றி உள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவம் தவறி நடவு செய்த பகுதிகளில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலில் இருந்து பயிர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனை வழங்கியுள்ளார். கரூர் மாவட்டம் தோகைமலை மற்றும் கடவூர் வட்டாரங்களில் கணிற்றுப்பான விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரும்பாலான பகுதிகளில் நெற்பயிரில் பூட்டு பெற்று உள்ளதால் விவசாயிகள் நல்ல மகசு+ல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியில் உள்ளனர். இருந்தபோதும் சில பகுதிகளிகள் சம்பாபருவ நெல்பயிரில் தொடர் மழையினாலும், தட்பவெப்பநிலை மாறுதல்களினாலும் ஆனைக்கொம்பின் ஈ என்ற பு+ச்சியின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.

நெல் நடவுசெய்த 35 முதல் 45 நாட்களில் புழுக்களின் தாக்குதல் அதிகம் காணப்படும். இந்த பூச்சி மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல சிறியதாகவும் நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதன் வாழ்க்கை சுழற்சியானது 14 முதல் 21 நாட்களை கொண்டதாகும். இந்த ஈ தாக்குதலால் நெற்பயிரில் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ வெங்காய தாள் போல் தோன்றும். மேலும் பார்ப்பதற்கு யானையின் கொம்பை போன்ற தோற்றம் இருக்கும். தாய் ஈக்கள் சராசரியாக 100 முதல் 150 முட்டைகள் வரை இலைகள், தாள்களின் மேல்புறம் முட்டையிடும். இதிலிந்து வரும் புழுக்கள் நெற்பயிர்களின் குருத்துகளை துளைத்து குழல்களாக மாற்றிவிடும். இதனால் பயிரின் தூர;கிளில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.

ஆகவே ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க கீழ்கண்ட வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். இதில் நெல்வயலில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்கவேண்டும். விளக்குப் பொறிகளை வைத்து தாய் அந்துபூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். புரிந்துரைக்கப்பட்ட அளவுக்குமேல் தழைச்சத்து மற்றும் சாம்பல்சத்து உரங்களை பயன்படுத்தக்கூடாது. ஆனைக்கொம்பனின் இயற்கை எதிரிகளான நீள்தாடைசிலந்தி, வட்டசிலந்தி, ஊசித்தட்டான், குளவி போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும். 10 சதவிகிதத்துக்கு மேல் தாக்குதல் தென்பட்டால் பின்வரும் ரசாயன பூச்சிகொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதால் ஆனைக் கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

அதாவது ஒரு ஏக்கருக்கு பிரபினோபாஸ் 50 சதவீதம் இசி- 400மில்லி லிட்டர் அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். அல்லது குளோரிபைரிபாஸ் 20 சதவீதம் இசி-500 மில்லி லிட்டர் அளவை 200 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். அல்லது பாசலோன் 35 சதவீதம் இசி- 600 மில்லி லிட்டர் அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். அல்லது குயினைல்பாஸ் 5 சதவீதம் ஜி- 2 கிலோ அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். ஆகவே மேற்கூறிய ரசாயன பூச்சி கொல்லி மருந்தை ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதற்கான அளவீட்டில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை விவசாயிகள் முற்றிலும் கட்டுப்படுத்தாலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi