Wednesday, May 1, 2024
Home » சமைக்கும் பாத்திரங்களின் நன்மையும் தீமையும்!

சமைக்கும் பாத்திரங்களின் நன்மையும் தீமையும்!

by

நன்றி குங்குமம் டாக்டர் நாம் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் நன்மையா.. தீமையா என்று பலருக்கும் தெரிவதில்லை. ஆனால், சில பாத்திரங்களில் சில உணவு வகைகளை சமைத்தால் அவை விஷத்தன்மை உள்ளதாக மாறிவிடும் அபாயமும் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நினைப்பவர்கள் சமைக்கும் பாத்திரங்களை பற்றியும் அறிந்து கொள்வது அவசியம்.அந்த காலத்தில், நம்முடைய முன்னோர்கள் சமையலுக்கு உடலுக்கு ஊறுவிளைவிக்காத தண்டவாளம், இரும்பு போன்றவற்றில் செய்யப்பட்ட பாத்திரங்களையும் மண் சட்டியையுமே பிரதானமாக பயன்படுத்தினார்கள். அதன்பின் செம்பு, பித்தளை பாத்திரங்களையும் சமைக்க பயன்படுத்தினார்கள். அவையெல்லாம் காலப்போக்கில் மாறி எவர்சில்வர், அலுமினியம் பயன்பாடுகள் புழக்கத்துக்கு வந்தது. அதன் பிறகு எண்ணெய் ஒட்டாமல் இருக்கும் நான்ஸ்டிக், பாத்திரங்கள் வந்தது. தற்போது நான்ஸ்டிக் பாத்திரங்களுக்கு அடுத்தகட்டமாக செராமிக் (பீங்கான்) பாத்திரங்களிலும் சமைக்க தொடங்கியுள்ளனர். எதில் சமைத்தால் என்ன மாதிரியான நன்மைகள் தீமைகள் நமக்கு கிடைக்கிறது என்று பார்க்கலாம்:பித்தளைகடந்த காலங்களில் மக்கள் பெரும்பாலும் பித்தளை பாத்திரங்களில் உணவு சமைத்ததை நாம் பார்த்திருப்போம். பித்தளை பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியம் காக்கப்பட்டது. ஆனால், அதில் அதிக உப்பு அல்லது புளிப்பு சார்ந்த பொருட்களை சமைப்பது உணவில் விஷத்தை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது. அலுமினிய பாத்திரங்கள்அலுமினிய பாத்திரங்கள் இன்று அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில், அலுமினியத்தில் உள்ள மூலக்கூறுகள் வெப்பத்தைப் பெற்றவுடன் விரைவில் செயல்படுத்தப்படுகின்றன. அதனால்தான் பெரும்பாலான உணவுகள் அலுமினிய பாத்திரங்களில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இது மிக விரைவில் அமிலத்துடன் ரசாயன எதிர்வினைகளைக் காட்டத் தொடங்குகிறது. எனவே, அதில் புளிப்பு அல்லது அசிடிக் காய்கறிகளை பயன்படுத்தக் கூடாது.ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களும் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கார்பன், குரோமியம் மற்றும் நிக்கல் ஆகியவற்றை இரும்பில் கலப்பதன் மூலம் உருவாகும் கலப்பு உலோகம் இதில் சமைப்பதில் ஆரோக்கியத்திற்கு எந்த தீங்கும் இல்லை. இந்த பாத்திரங்களின் வெப்பநிலை மிக விரைவாக உயர்கிறது. இரும்பு இரும்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் இப்போது அரிதாகவே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த உலோகப் பானையில் தயாரிக்கப்படும் உணவு ஒவ்வொரு வகையிலும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த பாத்திரங்களில் சமைப்பது தானாகவே உணவில் உள்ள இரும்பின் அளவை அதிகரிக்கிறது மற்றும் உணவு அதன் முழு ஊட்டச்சத்தையும் பெறுகிறது. பொதுவாக. ஒவ்வொரு மனிதனுக்கும் இரும்பு சத்து தேவை. குறிப்பாக பெண்களின் உடலில் இரும்புச்சத்துக்கு நல்ல பங்கு உண்டு. நான் ஸ்டிக்நான் ஸ்டிக் என்றால் எதையும் ஒட்டாத ஒரு பாத்திரம். அத்தகைய பாத்திரங்களில் சமைக்க அதிக நெய் அல்லது எண்ணெய் தேவையில்லை. ஆனால், உணவைத் தயாரிக்கும்போது இந்த பாத்திரங்களில் அதிக கீறல்கள் இருந்தால். அது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.தாமிரம் தாமிரம் இரும்பை விட ஐந்து மடங்கு சிறந்தது மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களைவிட இருபது மடங்கு சிறந்தது என்று பரவலாக அறியப்படுகிறது. சிறந்த வெப்ப கடத்துத்திறன் பண்புகள் இதில் உள்ளது. வெப்பநிலையை மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்பதால் இது தீ பிடிக்கும் அபாயத்தையும் குறைக்கிறது. இதன் விளைவாக குறைந்த ஆற்றலுடன் சமைக்க முடியும். தாமிர பாத்திரங்கள் நன்றாக வெப்பமடைவதால், செப்புப் பானைகளில் தயாரிக்கப்படும் உணவுகள் பாரம்பரியமானவற்றில் தயாரிக்கப்பட்டதை விட நீண்ட நேரம் சூடாக இருக்கும்.மண்பாண்டம்மண்பாண்டத்தில் சமைப்பதால், வெப்பம் சீராக பாத்திரம் முழுவதும் பரவுகிறது. மேலும், நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை மண்பாண்டங்களுக்கு இருப்பதால், உணவு சூடாகவே இருக்கும். அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது. பாத்திரம் முழுவதும் வெப்பம் மெதுவாகப் பரவுவதால், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே நிலைத்திருக்கின்றன. இதுவே மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவு கூடுதல் சுவையுடன் இருப்பதற்கு முக்கியக் காரணம்.செராமிக் பீங்கான் பாத்திரங்கள் உலோகங்கள் அல்லது நச்சு ரசாயனங்கள் ஆகியவை இன்றி பாதுகாப்பான சுகாதாரமான கனிம பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால், இவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. மேலும், பீங்கான் சமையல் பாத்திரங்கள் மெதுவாக வெப்பமடைகின்றன, ஆனால் வெப்பத்தை நன்கு தக்கவைத்துக் கொள்ளும் தன்மையுடையது. இதனால், உணவுகளை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்கின்றது. தொகுப்பு : பா.பரத்

You may also like

Leave a Comment

3 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi