திருவெறும்பூர், ஜன.3: திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் (சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் நடைபெறுவது போல) ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பாராட்டு உத்ஸவ பூஜை நடந்தது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் நடைபெறுவது போல திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தின் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் பாராட்டு உத்ஸவ பூஜை நடந்தது.
அப்போது, திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் தீர்த்த குளத்தில் திருமஞ்சன நீராட்டு விழா முடிந்த பக்தர்களுக்கு அவுல் பாயாசம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிறகு அங்கிருந்து பெல் வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு யானை மீது வீதி உலாவுடன் கோயிலை சென்றடைந்தது. இதில் ஏராளமான ஐயப்பன் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.