தொண்டி, ஏப்.7: தொண்டி அருகே நம்புதாளை சிவன் கோயிலில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொண்டி அருகே நம்புதாளை நம்பு ஈஸ்வரர் சமேத அன்னபூரணி கோயிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பால்,பன்னீர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 12 வகை அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து நந்தி, சிவன் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. உற்சவ மூர்த்திகள் கோயிலை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சனி பிரதோஷ வழிபாடு
previous post