அழகர்கோவில், அக். 17: அழகர்கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி சுந்தரராஜ பெருமாள் கோயில் நடை அக்.28ம் தேதி அடைக்கப்பட உள்ளது. இதுகுறித்து கோயில் துணை ஆணையர் ராமசாமி வெளியிடுள்ள அறிக்கை: அக் 28ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு அழகர்கோயில் மற்றும் இக்கோயிலின் உபகோயில்களான அழகர்மலை ராக்காயி அம்மன் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில், தல்லாகுளம் அய்யப்பன் கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில், மேலூர் ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றில் மாலை 6 மணிக்குள் அனைத்து பூஜைகளும் நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். இக்கோயில்களில் அக்.29ம் தேதி காலை 6 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு கிரகண தோஷ நிவர்த்திக்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதற்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கபடுவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.