Tuesday, May 21, 2024
Home » சங்கரன்கோவில் அருகே காற்றாலை நிறுவன ஊழியர் மர்மச்சாவு

சங்கரன்கோவில் அருகே காற்றாலை நிறுவன ஊழியர் மர்மச்சாவு

by Karthik Yash

சங்கரன்கோவில்,ஆக.29: சங்கரன்கோவில் அருகே காற்றாலை நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வீராணத்தைச் சேர்ந்த வேல்முருகனின் மகன் சவுந்தரபாண்டி என்ற சுபாஷ் (24). இவர் சங்கரன்கோவில் அடுத்த நடுவக்குறிச்சி அருகே சக்கரைக்குளம் தனியார் காற்றாலை நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுபாஷ் சக்கரைகுளத்தில் இருந்து பெரியசாமியாபுரம் செல்லும் சாலையில் உடலில் காயங்களுடன் கிடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் சுபாஷை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சுபாஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சுபாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே சுபாஷின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குற்றம்சாட்டிய அவரது உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் குவிந்ததோடு முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

7 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi