சங்கரன்கோவில், பிப்.17: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவராக மூத்த வழக்கறிஞர் சண்முகையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவர் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூசைப்பாண்டியன், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, வக்கீல் அன்புச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.