கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்நிலையில், வாக்குப்பதிவை நியாயமான முறையில் நடத்தக்கோரியும், வெளியூர்காரர்களை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் கோவை மாவட்ட அதிமுக எம்எல்ஏக்களான எஸ்.பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் கே அர்ஜூனன், கே.ஆர் ஜெயராமன், பி.ஆர்.ஜி. அருண்குமார், தாமோதரன், வி.பி கந்தசாமி, அமுல் கந்தசாமி, ஏ.கே செல்வராஜ் ஆகிய 9 பேரும், அதிமுக வழக்கறிஞர்களும் நேற்று கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர், மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்து கோரிக்கை தொடர்பான மனு அளித்தனர். இதையடுத்து, கலெக்டரின் கார் நிறுத்தும் இடத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் துணை கமிஷனர் ஜெயசந்திரன், உதவி கமிஷனர் மணிகண்டன் ஆகியோர் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘‘போராட்டத்தை வாபஸ் பெறுங்கள், உங்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர். அதை ஏற்காமல் அதிமுகவினர் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். சுமார் நான்கரை மணி நேரத்திற்கு மேல் போராட்டம் நீடித்தது. இதையடுத்து போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாஜி அமைச்சர் எஸ்பிவேலுமணி உள்பட 9 எம்எல்ஏக்கள் உள்பட 23 பேரை கைது செய்தனர். அவர்களை, ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். …
கோவை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் கைது
previous post