கோவை: கோவையை சேர்ந்த மருத்துவமனை உரிமையாளரிடம் ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக ரூ.2.85 கோடி மோசடி நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமறைவாகியுள்ளார். தேடப்படும் பன்னீர்செல்வத்தின் அலுவலக லாக்கரை திறக்க காவல்துறையினரால் இயலவில்லை. லாக்கரை திறக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட இருப்பதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது. லாக்கரை திறக்க இயலாததால் அலுவலகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தின் மீது ஏற்கனவே 21 பெரும் மோசடி புகார்கள் நிலுவையில் உள்ளன….
கோவையை சேர்ந்த மருத்துவமனை உரிமையாளரிடம் ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.2.85 கோடி மோசடி
previous post