அரூர்: மொரப்பூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கோயிலில் இருவர் திருட முயன்றனர். அவர்களில் ஒருவர் தப்பிய நிலையில், ஒருவரை பிடித்து பொதுமக்கள் மொரப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கோயிலுக்கு வந்து விசாரணை நடத்தியதில், வெளிப்புறம் மற்றும் உள்புற பூட்டுகள் உடைக்கப்பட்டதுடன் சிசிடிவி கேமரா ஒயர்களும் துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கிருந்த ஷட்டரை கடப்பாரையால் உடைத்தபோது, ஏற்பட்ட சத்தத்தில் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து, மர்ம நபரை பிடித்துள்ளனர்.விசாரணையில், பிடிபட்டவர் சிட்லிங் மலைத்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த கணேசன்(44) என்பது தெரியவந்தது. தப்பியோடிய மற்றொருவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது
previous post