Friday, May 17, 2024
Home » கோபியில் மத்திய அரசு மலிவு விலை மருந்தகம் திறப்பு விழா

கோபியில் மத்திய அரசு மலிவு விலை மருந்தகம் திறப்பு விழா

by Ranjith

 

ஈரோடு, ஆக.22: கோபி, கச்சேரி மேடு, தாலுகா ஆபிஸ் எதிரில் பிரதம மந்திரி பாரதிய ஜன் ஔஷாதி கேந்திரா மத்திய அரசு மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் உரிமையாளர்கள் மகேஸ்வரன், கார்த்திகேயன் ஆகியோர்கள் வரவேற்றனர். பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு பிரிவின் மாநில செயலாளர் ஜி.ஆர்.சி.ஜனகரத்தினம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய மலிவு விலை மருந்தகத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் தென் மாநில இணைச்செயலாளர் தமிழ்மணி, பாஜக கோபி மேற்கு ஒன்றிய தலைவர் கே. ஏ. காளியப்பன், கோபி நகர பிஜேபி பொதுச் செயலாளர் ரகு நந்தன், மத்திய அரசின் நலத்திட்டங்கள் பிரிவு மாவட்ட செயலாளர் முருகையன், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து உரிமையாளர்கள் கூறும்போது, ‘இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து இங்கிலீஷ் மருந்துகளுக்கும் 30% முதல் 90% வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை சிறப்பு தள்ளுபடி விலையில் வாங்கி பயன்பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மேலும் விவரங்களுக்கு;-99430-28344 என்கின்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறினார்கள்.

You may also like

Leave a Comment

one × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi