கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, எஸ்ஐ., மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் கொள்ளிடம் அருகே பனங்காட்டாங்குடி மெயின் ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அதிவேகமாக சாக்கு மூட்டைகளுடன் வந்த 2 இரு சக்கர வாகன ஓட்டிகளையும் நிறுத்தி சோதனையிட்ட போது, மணல்மேடு அருகே உள்ள மண்ணிபள்ளம் கிராமம் மந்தை கோயில் தெருவைச் சேர்ந்த திலிப்குமார்(35) மற்றும் தரங்கம்பாடி அருகே ஆயர்பாடி ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த முருகேசன்(22) ஆகியோர் காரைக்காலிலிரந்து சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.போலீசார் இருவரையும் வழக்குப்பதிந்து கைது செய்து 750 பாட்டில்களில் கடத்தி வரப்பட்ட 150 லிட்டர் சாராயத்தையும், 1,400 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் கடத்தி வந்த 140 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து, சாராயம் கடத்துவதற்கு பயன்படுத்திய டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர். இதில் தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடத்தி வரப்பட்ட சாராயத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. போலீசார் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்….