சென்னை: கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை 2 நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திடீரென சளி பிரச்னை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, அவர் கடந்த 15ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ குழுவினர் அரை கண்காணித்து தேவையான சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவர் கடந்த திங்கட்கிழமை நடந்த குடியரசு தலைவருக்கான தேர்தலில் பி.பி.இ கிட் அணிந்து சென்னை தலைமை செயலகத்திற்கு வந்து வாக்களித்து விட்டு சென்றார். இந்த நிலையில் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். இதையடுத்து அவர் நேற்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து, 2 நாட்கள் அவரை ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்….