Friday, May 17, 2024
Home » கொடைக்கானலில் மலர் செடிகளை கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

கொடைக்கானலில் மலர் செடிகளை கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

by Karthik Yash

கொடைக்கானல், ஏப். 14: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சரவணன் தலைமை வகித்தார். குடிமை பொருள் தாசில்தார் சரவணவாசன், பிரையண்ட் பூங்கா மேலாளர் சிவபாலன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு தேவையில்லை நோட்டு என அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டதுடன், இதுபற்றி சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பூங்காவில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மலர் செடிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக விரலில் மை தடவியது போன்ற மலர் உருவ அமைப்பும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இது சுற்றுலா பயணிகளை ெவகுவாக கவர்ந்தது.

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi