பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி சாலையில் உள்ள கற்பக விநாயகர் கோயிலை, கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் மூடிவிட்டு சென்றனர். மறுநாள் காலை கோயிலை திறக்க நிர்வாகி வந்தபோது, கதவின் பூட்டு மற்றும் உண்டியலில் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், 2 நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அவர்களை தேடி வருகின்றனர்….
கொடுங்கையூர் பகுதியில் கோயில் உண்டியல் கொள்ளை
previous post