ஓமலூர், டிச.24: ஓமலூர் அடுத்த ஆர்.சி.செட்டிப்பட்டியில் ஏழை எளிய குழந்தைகளுக்கான தங்கும் விடுதி உள்ளது. இங்குள்ள மாணவர்களுக்கு நல்லொழுக்க பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறையில் உள்ள குற்றவாளிகள் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. பெத்தேல் திட்ட மேலாளர் ஜான்பீட்டர் பிரித்திவிராஜ், போதகர் குணசேகரன், ஜான், எமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஐசக், தினகரன், நன்னடத்தை அலுவலர்கள் கோபிசங்கர், வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கைதிகளின் குடும்பத்தாருக்கு நலத்திட்ட உதவிகள்
previous post