Thursday, May 16, 2024
Home » கெடார் அருகே செல்போன் டவரில் ரூ. 30 ஆயிரம் பொருட்கள் கொள்ளை

கெடார் அருகே செல்போன் டவரில் ரூ. 30 ஆயிரம் பொருட்கள் கொள்ளை

by Ranjith

 

கண்டாச்சிபுரம், மே 19: விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே கடந்த மாதம் இரண்டு செல்போன் டவர்களில் 30,000 மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதாக இருவர் புகார் அளித்திருந்தனர். இரண்டு புகாரையும் பெற்று கெடார் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அரியலூர் திருக்கை கிராம பகுதியில் மற்றொரு டவரின் அருகில் சந்தேகபடும் வகையில் மூன்று வாலிபர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அந்த சந்தேகத்தின் பேரில் கெடார் போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது மூவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அதில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமம் நஸிருதீன் மகன்கள் ஜாவித் அன்சாரி(28), அவரது சகோதரர் ராஹூத்(20), மற்றும் விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த சுரேஷ் மகன் சுசில்குமார்(30), என்பதும், மூவரும் கம்யூட்டர் உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் சீரமைக்கும் பணிகளை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர்களது செல்போன் என்னை கொண்டு அன்று சம்பவ நேரத்தில் செல்போன் டவரை கொண்டு சோதனை செய்தனர். அதில் கெடார் அருகே நடந்த செல்போன் டவர் கொள்ளையில் மூவரும் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் மூவர் மீதும் கெடார் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

You may also like

Leave a Comment

5 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi