Monday, June 3, 2024
Home » கூலி பாக்கி 400 ரூபாயை தராததால் சக தொழிலாளியை தாக்கி லாரியில் தள்ளிவிட்டு கொன்ற தொழிலாளி: தெலங்கானாவில் பயங்கரம்

கூலி பாக்கி 400 ரூபாயை தராததால் சக தொழிலாளியை தாக்கி லாரியில் தள்ளிவிட்டு கொன்ற தொழிலாளி: தெலங்கானாவில் பயங்கரம்

by kannappan

ஐதராபாத்: ெதலங்கானாவில் கூலி பாக்கி 400 ரூபாயை தராததால் சக தொழிலாளியை கட்டையால் தாக்கி லாரியில் தள்ளிவிட்டு கொன்ற கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த பாலாநகர் நர்சாபூர் நடைபாதையில் பில்லிபுரம் னிவாஸ் (35) என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்தார். இவருடன் காசிராம் என்பவரும் கட்டிட வேலைக்கு சென்று வருவது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன் இருவரும் கட்டிட வேலைக்கு சென்றனர். காசிராமுக்கு ரூ.1,200 தருவதாக கூறி வேலைக்கு அழைத்து சென்ற னிவாஸ், ரூ.800 மட்டுமே கொடுத்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது. மீதமுள்ள ரூ.400-ஐ தரவேண்டும் எனக்கூறி காசிராம், னிவாசிடம் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் நர்சாபூர் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த னிவாசிடம், மீதமுள்ள பணத்தை கேட்டு காசிராம் தொந்தரவு செய்தார். அதனால் அவர்களுக்குள் மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை அப்பகுதி மக்கள் சமரசம் செய்துவைத்து அனுப்பி வைத்தனர். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும், நிவாஸ் படுத்திருந்த இடத்திற்கு காசிராம் வந்தார். அவர் தனது கையில் வைத்திருந்த கட்டையால் தூங்கிக் கொண்டிருந்த னிவாசை தாக்கினார். அதனால் மயக்க நிலையில் இருந்த னிவாசை, அவ்வழியாக சாலையில் சென்று கொண்டிருந்த லாரிக்கு அடியில் தள்ளிவிட்டார். அதனால் னிவாஸ் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார். லாரி டிரைவரின் வாக்குமூலம் மற்றும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், காசிராம் தான் னிவாசை அடித்துக் கொன்றது உறுதியானது. இதுகுறித்து பாலாநகர் இன்ஸ்பெக்டர் கே.பாஸ்கர் கூறுகையில், ‘காசிராம் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார்….

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi