சென்னை: குவைத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனர்.இதையடுத்து அந்த விமானம் உள்நாட்டு விமானமாக சென்னையிலிருந்து ஐதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டும். எனவே விமான பணியாளர்கள் விமானத்திற்குள் ஏறி சுத்தப்படுத்தினர். அப்போது விமான கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் கருப்பு பிளாஸ்டிக் கவர் ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர்.இதையடுத்து விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் வந்து அந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதியானதும், பார்சலை பிரித்து பார்த்தனர். அதனுள் 8 தங்கக்கட்டிகள் இருந்தன. விமானநிலைய சுங்கத்துறையிடம் அதை ஒப்படைத்தனர். அவர்கள் தங்கக்கட்டிகளை ஆய்வு செய்தனர். 8 தங்கக்கட்டிகளும் மொத்தம் 800 கிராம் எடை இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ₹38.32 லட்சம். பின்னர், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, விமானத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் விமானநிலைய வருகை பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து, கடத்தல் ஆசாமியை தேடுகின்றனர்….