கிருஷ்ணகிரி, ஏப்.11: கிருஷ்ணகிரி அடுத்த சானம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ் (32). இவர் பெங்களூருவில் சிப்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ரம்யா (26). இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், யுகாதி பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து ரம்யா தனது குழந்தையுடன் கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு, கடந்த 5ம் தேதி மதியம் வந்தார். அன்று இரவு 7 மணியளவில், அவர் குழந்தையுடன் திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி ராமராஜ், தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதில், அவதானப்பட்டியைச் சேர்ந்த சுந்தரேசன் (26) என்பவர், தனது மனைவியை, மகளுடன் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையுடன் இளம்பெண் மாயம்
previous post