Friday, May 17, 2024
Home » குளத்தில் மூழ்கி 2 மனவளர்ச்சி குன்றிய சிறுவர்கள் சாவு

குளத்தில் மூழ்கி 2 மனவளர்ச்சி குன்றிய சிறுவர்கள் சாவு

by Karthik Yash

முஷ்ணம், ஏப். 18: கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சந்தானலட்சுமி. இவர்களுக்கு திலீப் (16), தினேஷ் (14) என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்கள். சந்தானலட்சுமி கடந்த 8 வருடத்துக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் இவரது கணவர் ராமமூர்த்தி 2 குழந்தைகளையும் தனியாக விட்டுவிட்டு சென்னைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து 2 குழந்தைகளையும் சந்தானலட்சுமியின் தாய் லலிதா கடலூரில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் விடுமுறையையொட்டி 2 குழந்தைகளும் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்தனர். நேற்று 2 பேரும் இயற்கை உபாதைக்காக வீட்டுக்கு அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தேடியபோது 2 பேரும் குளத்தில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சோழத்தரம் இன்ஸ்பெக்டர் ராபீன்சன் மற்றும் போலீசார் 2 சிறுவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

nineteen + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi