கும்பகோணம்: நயன்தாராவும் அவரது காதலரான விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இருவரும் பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக இருவரும் நேற்று கும்பகோணம் வந்தனர். ஆதிகும்பேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மங்களாம்பிகை சன்னதிக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சென்ற நயன்தாரா, அங்கு விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலான மேலவழுத்தூர் ஆற்றங்கரை காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்து பொங்கலிட்டும், படையலிட்டும் சிறப்பு வழிபாடு செய்தனர். சில நல்ல காரியங்களுக்கு அனுமதி கேட்டு குலதெய்வம் கோயிலில் வழிபட்டதாக விக்னேஷ் சிவன் தனது டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.அஜித் வேடத்தில் சல்மான் கான்…
குலதெய்வம் கோயிலில் நயன்தாரா பொங்கலிட்டு சாமி தரிசனம்
previous post