திங்கள்சந்தை,செப்.20 : குருந்தன்கோடு அருகே சாமிவிளையை சேர்ந்தவர் பாபு. அவரது மனைவி சிந்துஜா (28). அவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாபுவின் அண்ணன் பாலகிருஷ்ணனுக்கும் இடையே குடும்ப சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.சம்பவத்தன்று மாலை பாலகிருஷ்ணன் வீட்டில் ஆஸ்பெஸ்றாஸ் ஷீட் போடும் பணி நடந்தது. அப்போது ஷீட் சிந்துஜா எல்கைக்குள் வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் வேலை செய்தவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது பாலகிருஷ்ணன் அவதூறாக பேசி சிந்துஜாவை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் சிந்துஜாவுக்கு கீழ் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து சிந்துஜா இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருந்தன்கோடு அருகே இளம்பெண்ணை கல்லால் தாக்கியவர் மீது வழக்கு
previous post