Tuesday, June 11, 2024
Home » குமரி மாவட்டத்தில் 1.70 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்தனர்-வீடு வீடாக சென்று பதிவு செய்யும் அலுவலர்கள்

குமரி மாவட்டத்தில் 1.70 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்தனர்-வீடு வீடாக சென்று பதிவு செய்யும் அலுவலர்கள்

by kannappan

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 92 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்களர்கள் 7 லட்சத்து 92 ஆயிரத்தி 410 பேர், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 99 ஆயிரத்து 950 மற்றும் இதர வாக்காளர்கள் 195 பேர் உள்ளனர். இந்தநிலையில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகளைத் தடுக்கவும், ஒரு வாக்காளரின் விவரம் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களிலோ அல்லது ஒரு வாக்காளரின் விவரங்கள் இரண்டு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம் பெறுவதையோ தடுக்க வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை கடந்த 1-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் ஆயிரம் வாக்காளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதள முகவரியில் மின் சான்றிதழை பெறலாம். மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவித்து, அவர்களை மின் சான்றிதழ் பெற வைக்குமாறு அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தனியார் நிறுவன, ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், தொழில் முனைவோர், அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், ஆர்வம் உள்ள வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து மின் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை. விருப்பம் உள்ளவர்கள் இணைத்துக் கொள்ளலாம். வாக்காளர்கள் தங்களது வாக்குச் சாவடி நிலைய அலுவலர்களிடம் இருந்து 6பி படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். Garuda Mobile Appல் பூர்த்தி செய்து அளித்தும் இணைக்கலாம். வாக்காளர் பதிவு அலுவலர்கள் (வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள்), உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்கள் (வட்டாட்சியர் அலுவலகங்கள்), வாக்காளர் உதவி மையம், இ-சேவை மையங்கள் ஆகியவற்றை அணுகியும் இணைத்துக் கொள்ளலாம். https://www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், VOTER HELP LINE செயலி மூலமாக தாங்களாகவே  ஆன்லைன் முறையிலும் இணைத்துக் கொள்ளலாம். நேரடியாக 6பி படிவத்தை பூர்த்தி செய்து அளித்தால், அதற்குரிய ரெபரன்ஸ் எண் கிடைக்க தாமதமாகும். ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தால் உடனடியாக கிடைக்கும். மாவட்டத்தில் தற்போது வரை ஒரு லட்சத்து 70ஆயிரத்து 248 பேர் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்தல் பணியை மேற்கொண்டனர்….

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi