பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே குப்பை வண்டியில் பேட்டரி திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடுகின்றனர். பூந்தமல்லி அடுத்த அகரமேல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதற்காக ஊராட்சி மன்றத்தின் சார்பில் டிராக்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பின் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே டிராக்டரை நிறுத்திவைத்து விட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். நேற்று காலை ஊழியர்கள் வந்து பார்த்தனர். அப்போது டிராக்டரில் இருந்த பேட்டரிகளை காணவில்லை. மர்ம நபர்கள் பேட்டரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் நசரத்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….