காரைக்குடி, ஜூன் 21: காரைக்குடி அருகே குன்றக்குடியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் நாண் மங்கல பெரு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு பூசை மடம் வழிபாடு. 9 மணிக்கு அருள்தரு சண்முகநாத பெருமான் திருக்கோவில் வழிபாடு. தொடர்ந்து பகர் 12 மணிக்கு அருளாலய வழிபாடும். 1 மணிக்கு மகேசுவர பூசையும் நடந்தது.
விழாவில் எம்எல்ஏ மாங்குடி, தொழிலதிபர் படிக்காசு, திமுக மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர் மருதுபாண்டியன், ஒன்றிய பொருளாளர் மணச்சைபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து பெற்றனர்.