தூத்துக்குடி, பிப்.12: தூத்துக்குடி சாந்திநகர் பகுதியில் குடும்ப பிரச்னை காரணமாக கட்டுமானத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தூத்துக்குடி சாaந்திநகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் அன்பு கணேசன் (53). கொத்தனார் வேலைக்கு சென்றுவந்த குடும்பத்தில் நிலவிவந்த பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார், உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.