விருதுநகர், செப்.22: விருதுநகர் யானைக்குழாய் தெருவை சேர்ந்தவர் செல்வபோதகர்(32). இவரது மனைவி ஜெனிபர்(23). கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்த நிலையில், பெரியவர்கள் சமாதானம் செய்து வந்துள்ளனர். வெல்டிங் வேலை செய்து வந்த செல்வபோதகர், நேற்று முன்தினம் மாலை புது பஸ்நிலையம் அருகில் ஆத்துமேடு ரயில்வே பாதை பாலம் அருகில் இறந்து கிடந்தார். பஜார் போலீசில் மனைவி ஜெனிபர் புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.