ஓசூர்: ஓசூர் கேசிசி நகர் பகுதியில், குடியிருப்போர் நலச்சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா, நேற்று நடைபெற்றது. ஓசூர் கேசிசி நகர் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில், நேற்று குடியிருப்பு நலச்சங்கத்தின் பெயர் பலகை திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் சேகர்பாபு தலைமை வகித்தார். மேயர் சத்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பெயர் பலகையை திறந்து வைத்து, இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, கவுன்சிலர் மம்தா சந்தோஷ், சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், செந்தில்குமார், வெங்கடேஷ், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குடியிருப்போர் நலச்சங்க பெயர் பலகை திறப்பு விழா
previous post