சிவகங்கை, ஆக.30: சிவகங்கை அருகே பெருமாள்பட்டிக்கு குடிநீர், பஸ் வசதி கோரி கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் மணியம்மா, மாவட்ட பொருளாளர் சின்னக்கருப்பன், ஒன்றிய செயலாளர் தனசேகரன் மற்றும் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் பெருமாள்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கையில் இருந்து பெருமாள்பட்டிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.