திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகையில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப். 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில் கிடைத்த 7 முதுமக்கள் தாழிகளில் உள்ள பொருட்களை தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் தலைமையிலான குழு நேற்று வெளியே எடுத்தனர். முதலாவது தாழியினுள் மண்டை ஓடு, எலும்புகள், கருப்பு சிவப்பு வண்ண உணவு பாத்திரம் கண்டறியப்பட்டது. இந்த தாழியின் மேற்புற மூடியை அகற்றியபோது, பண்டைய காலத்தில் காதில் அணியும் சுடுமண்ணால் ஆன வளையம் போன்ற அமைப்பும் கண்டறியப்பட்டது. முதுமக்கள் தாழியினுள் உள்ள அனைத்து பொருட்களும் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். …
கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் சுடுமண் காதணி கண்டுபிடிப்பு
previous post