பாகூர், பிப். 8: திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, அம்மையப்பன் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(51) சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டெட்ண்டாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர், வீட்டுக்கு புறப்பட்ட அவர் அவ்வழியாக சென்ற ேஷர் ஆட்டோவில் கடலூருக்கு புறப்பட்டார். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற கார், எதிர்பாராத விதமாக ேஷர் ஆட்டோவின் பின்பகுதியில் மோதியது.
இதில், ஆட்டோவில் பயணம் செய்த வெங்கட்ராமன், கடலுார் மல்லிகா (53) கிருமாம்பாக்கம் அக்ஷயா(23) ஆட்டோ ஓட்டுனர் கடலூர் வரக்கால்பட்டு அன்புதாசன் (42) ஆகியோர் காயமடைந்தனர்.அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வெங்கட்ராமன் கொடுத்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.