கோபி,ஜூன்20: கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பெரியார் நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் பசுபதி(25). ஆட்டோ டிரைவர்.சிறுவலூர் அருகே உள்ள குட்டைபாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த மூர்த்தி மகள் முருகவேணி(19). பனியன் கம்பெனி தொழிலாளி. உறவினர்களான இருவரும் கடந்த 2 ஆண்டு காதலித்து வந்தனர்.காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும், எதிர்ப்பு கிளம்பியது.அதைத்தொடர்ந்து காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மொடச்சூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.