தர்மபுரி, பிப்.23:தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களின் மனு மீது குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வாரத்திற்கான குறைதீர்க்கும் முகாம் நேற்று முன்தினம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை வகித்தார். இம்முகாமில், மொத்தம் 98 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக இம்முகாமில் பெறப்பட்ட 59 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் ஏடிஎஸ்பி இளங்கோவன், டிஎஸ்பி மகாலட்சுமி, இன்ஸ்பெக்டர்கள் உத்தமச்செல்வன், யுவராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
காவல்துறை சார்பில் குறைதீர் முகாம்
previous post