Friday, May 17, 2024
Home » காளையார்கோவிலில் நர்சிங் மாணவி தற்கொலை உறவினர்கள் போராட்டம்

காளையார்கோவிலில் நர்சிங் மாணவி தற்கொலை உறவினர்கள் போராட்டம்

by Ranjith

காளையார்கோவில், நவ.27: சிவகங்கை அருகே கோவனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் குண்டுமலை-பாண்டியம்மாள் தம்பதி. இவர்களது இரண்டாவது மகள் மருதலட்சுமி(19). காளையார்கோவில் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், ஒரு மாத பயிற்சிக்காக அதே ஊரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து விட்டு மருத்துவமனையின் பின்புறம் உள்ள தங்கும் அறைக்கு சென்றுள்ளார்.

காலை வெகு நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்பட வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக பயிற்சி மாணவி, காவலாளியின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மாணவி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவம் இடம் வந்து மாணவியின் உடலை மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சிவகங்கையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மாணவியின் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

ten + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi