கம்பம், மார்ச் 28: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள நாகையகவுண்டன்பட்டி அருள்மிகு காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா திருவிழாவில் பொங்கல் வைத்து பூஜை வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து பங்குனி திருவிழாவை முன்னிட்டு வண்டி வேஷ ஊர்வலம் நடைபெற்றது. பேச ஊர்வலத்தில் பங்குபெற்ற பொதுமக்கள் பல்வேறு கடவுள்களின் உருவங்களை தரித்து வேஷமிட்டிருந்தது பக்தர்களை பரவசமடைய செய்தது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.