காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கால்நடை பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கால்நடை பராமரிப்பு உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு சம்பளம் முறையே ரூ 15 ஆயிரம், ரூ 18 ஆயிரம் எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும். அதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது 2வது வாரத்தில் வெளியிடப்படும் என வாட்ஸ் அப் செயலி, முகநூல் உள்ளிட்டவைகளில் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானவை. இம்மாதிரியான இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இது போன்ற போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….
கால்நடை துறையில் வேலைவாய்ப்பு என இணைய தளங்களில் வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை
previous post