சென்னை : காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, நாமக்கல், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யகூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் எனவும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி, ஈரோட்டில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அக்டோபர் 22-ம் தேதி 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரத்தில் நாளை மறுநாள் கனமழை பெய்யும் எனவும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நெல்லை, குமாரி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யகூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …