போடி, ஆக. 22: போடி 6வது வார்டு சின்னச்சாமி தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). இவர் நேற்று போடி தேனி சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் ஒன்று தினேஷ்குமார் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவ மனையில் சேர்ந்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.