வேப்பனஹள்ளி, ஆக.11: வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன். இவர் நேற்று முன்தினம், பணியை முடித்துக்கொண்டு, தனது காரில் உதவி திட்ட அலுவலர் ெசல்வகுமாருடன் வீட்டிற்கு புறப்பட்டார். தடதரை கிராமம் அருகே வந்த போது, எதிரே வந்த டூவீலர் இவர்களது கார் மீது மோதியது. இதில் காரில் வந்த செல்வகுமார், டூவீலரில் வந்த ராமசந்திரம் கிராமத்தை சேர்ந்த சூர்யா(19), கணேசன்(25) ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கார் மீது டூவீலர் மோதி அதிகாரி 2 பேர் காயம்
previous post