காரைக்குடி, மார்ச் 14: காரைக்குடி அருகே கோவிலூர் ஊராட்சி சேகரத்துப்பட்டி கிராமத்தில் எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி ரூ.8 லட்சத்தில் கட்டப்பட உள்ள கலையரங்கம் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் சுந்தரி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் அழகப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.