மதுரை, ஏப். 18: வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய வழக்கில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள தளக்காவூரைச் சேர்ந்த மரிய செல்வராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் ஊர் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு தொடர்பான நிகழ்வுகள் நடத்தப்பட்டன. தடை நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டு தொடர்பான நிகழ்வுகள் நடத்தப்படும் ஊர்களுக்கான பட்டியலில் எங்கள் கிராமத்தின் பெயர் இடம் பெறவில்லை.
விடுபட்ட கிராமங்கள் தற்போது மனுக்களின் அடிப்படையில் இணைக்கப்படுகின்றன. இதன்படி பட்டியலில் எங்கள் கிராமத்தையும் சேர்த்து, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்..சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் மனுவிற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.