காரைக்குடி, செப். 14: காரைக்குடியில் பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி கணேசபுரம் கருணாநிதி நகர் பகுதியில் 94 வருடங்களுக்கு மேலாக குடியிருப்போர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கணேசபுரம், கருணாநிதி குடியிருப்போர் நலச்சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குடியிப்போர் நலச்சங்க தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.
ஏஐடியூசி மாநில நிர்வாகி பிஎல்ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் சிவாஜிகாந்தி, சமநீதி மக்கள் கழக நிறுவன தலைவர் அக்னிசகுபர் சாதிக், தமிழ் கார்த்திக், பெரியார்முத்து உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். வட்டாசியர் தங்கமணி தலைமையில் அதிகாரிகள் பேச்சுவர்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.