காரைக்குடி, ஏப்.27: காரைக்குடி செக்காலைரோடு, அம்பிகாவதி டவரில் புதிதாக என்என்எல் டிரைவ் எக்ஸ் பிரிஓன்டு பைக் வாங்க, விற்க மற்றும் சர்வீஸ் செய்வதற்கான ேஷாரூம் திறப்பு விழா நடந்தது. நிறுவன நிர்வாக இயக்குநர் நா.பாண்டித்துரை பா.லலிதம், பா.லெட்சுமணபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். நிறுவன தலைவர் என்என்எல் நாச்சியப்பன், நா.பாண்டீஸ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், நகராட்சி சேர்மன் முத்துத்துரை, கேஆர்எஸ்பி.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் புதிய என்என்எல் டிரைவ் எக்ஸ் நிறுவனத்தை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் குணசேகரன், எஸ்.பாண்டித்துரை, தொழில்வணிகக்கழக தலைவர் சாமிதிராவிடமணி, பொருளாளர் எஸ்எல்பி.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறுவன தலைவர் என்என்எல்நாச்சியப்பன் கூறுகையில், பழைய பைக்குகளுக்கு ஒரு புது ஆரம்பமாக இந்த ஷோரூம் இருக்கும். பழைய வாகனங்களை ஒரிஜினல் உதிரிபாகங்களை மாற்றி, பெயிண்ட் தேவை என்றால் ஒரிஜினல் பெயிண்ட் அடித்து புதியது போல் புதுப்பிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். தமிழ்நாடு முழுவதும் இந்த டிரைவ் எக்ஸ் ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கு 1 வருட உத்தரவாதம் அளிக்கப்படும். 3 இலவச சர்வீஸ்கள், பைனான்ஸ் வசதியும் செய்யப்படும். விற்பனைக்கு பின் சர்வீஸ் செய்து தரப்படும். பழைய வாகனங்களை நம்பிக்கையுடன் எங்களிடம் வாங்கலாம் என்றார்.