Sunday, June 16, 2024
Home » காட்பாடி அருகே தாயை இழந்த 6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது

காட்பாடி அருகே தாயை இழந்த 6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது

by kannappan

வேலூர்: காட்பாடி அருகே தாயை இழந்த 6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயது கூலித்தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் தொழிலாளி கடந்த 30ம்தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் சிறுமி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளி, தனது மகளை பெல்டால் சரமாரி தாக்கியுள்ளார். மேலும் நடந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியுள்ளார். இதற்கிடையில் வீட்டின் அருகே உள்ள உறவினர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், காட்பாடி போலீசில் நேற்று புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கைது செய்யப்பட்ட தொழிலாளி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்….

You may also like

Leave a Comment

19 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi