சோமனூர், ஆக.8: தமிழ்நாடு காங்கிரஸ் ஓபிசி பிரிவிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை வடக்கு, தெற்கு, திருப்பூர் வடக்கு மாவட்டதலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் நவீன் அறிவித்தார். கோவை வடக்கு மாவட்ட தலைவராக கேசவராம், கோவை தெற்கு மாவட்ட தலைவராக நடராஜன், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவராக சாந்தலிங்கம், மாநில துணைத்தலைவர்கள் சக்திவேல், பழனிச்சாமி. மாநிலபொதுச்செயலாளர்கள் அசோக்குமார், நாகராஜன், ஜனார்த்தனன், பொன்மகள் கணேஷ். மாநில செயலாளர்கள் மோகன்ராஜ், செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்று கருமத்தம்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் விஎம்சி சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்தார்.