மதுரை, ஏப்.10: கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டுபேர் கைது செய்யப்பட்டனர். மதுரை பைகாரா, முத்துராமலிங்கபுரம், இபி பிரதான சாலையைச் சேர்ந்தவர் கருப்பசாமி(61). மதுரை மாநகராட்சியின் 72வது வார்டு கவுன்சிலர். இவர், முத்துராமலிங்கபுரம் இரண்டாவது புதுமேட்டு தெருவில் உள்ள காலியிடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சிமெண்ட் மேடை கட்டி கல்வெட்டு பதித்திருந்தார். அதை அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜா(37), வாஞ்சிநாதன்(48) ஆகியோர் உடைத்துள்ளனர். இதை கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக கருப்பசாமி அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிந்த சுப்ரமணியபுரம் போலீசார் விமல்ராஜா,வாஞ்சிநாதன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கவுன்சிலரை மிரட்டிய இரண்டு பேர் கைது
previous post